search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி ஆறுமுகசாமி"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம் ஜெ சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தது. #Jayalalithaa #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணை மேற்கொண்டது. இரவு 7 மணியளவில் தொடங்கிய ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர் பாண்டியன், அரவிந்தன் மற்றும் ஜெ.தீபா தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த ஆய்வின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்த அறை உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

    முன்னதாக விசாரணை ஆணையம் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்ய இருந்த நிலையில் அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #ApolloHospital
    ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைவதற்கான காரணம் என்ன? காய்ச்சல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்று அப்பல்லோ டாக்டரிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பினார். #Jayalalithaa #inquirycommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். அவர்களது விளக்கம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

    விசாரணை ஆணையத்தில் 75-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் ஆஜராகி உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று டாக்டர் கே.ஆர்.சுப்பிரமணியம் ஆணையத்தில் ஆஜரானார். பொது மருத்துவரான அவர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு இருந்ததை கண்காணித்து சிகிச்சை அளித்தவர்.


    அதனால் நீதிபதி ஆறுமுகசாமி, அவரிடம் உடலில் நீர்சத்து குறைவதற்கான காரணம் என்ன? காய்ச்சல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்று கேட்டார். அதற்கு அவர் ஜெயலலிதா உடல் பாதிப்பு குறித்த சில தகவல்களை கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ஜெ.தீபா சார்பில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நீதிபதி விசாரித்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும், உணவு தயாரிக்கப்பட்டது குறித்தும் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப் போவதாக நீதிபதி கூறினார்.

    ஆய்வு நடத்த செல்லும் போது ஜெ.தீபா தரப்பினரை அனுமதிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் கூறியுள்ளார். அதற்கு மனுதாரர் தரப்பில் உள்ளவர்களை ஆய்வு செய்யும்போது அனுமதிக்க வேண்டியதில்லை என்று சசிகலா தரப்பிலும், நீதிபதி தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. #Jayalalithaa #inquirycommission
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. #Jayalalithaa #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. ஜூலை 29ல் இரவு 7 மணி முதல் 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த விசாரணையின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்கிறது.


    மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்த அறை உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கிறது. முன்னதாக விசாரணை ஆணையம் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்ய இருந்த நிலையில் அப்பல்லோ மறுப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் 18ம் தேதி பத்திரிகையாளர் குருமூர்த்தி ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 20ல் மறுகுறுக்கு விசாரணைக்கு ஆஜராக பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயனுக்கும், மறுவிசாரணைக்கு ஆஜராக ராமலிங்கம் ஐ.ஏ.எஸ்-க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Jayalalithaa #ApolloHospital
    ×